• slide-1
  • slide-2
  • slide-3

விருது பெற்ற திலீப்குமார்

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் திலீப் குமார் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். குஜராத்தியைத் தாய் மொழியாகக் கொண்ட இவர் படைப்பிலக்கியம் தவிர மொழி பெயர்ப்பு விமர்சனம் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க வகையில் செயல் பட்டு வருகிறார்.


 

விருது பெற்ற ஞானக்கூத்தன்

நீண்ட தமிழ் மரபின் தொடர்ச்சியாய், அதன் வேர்களின் வாசங்களோடு ஜனித்தவை ஞானக்கூத்தனின் கவிதைகள். நவீனத்தின் பிரதேசங்களில் துளிர்த்து செழித்து அடர்ந்த பின்னும் மரபின் மயக்கம் தீராது, அதில் சஞ்சரித்துக் கிடப்பவை. கவிதை குறித்த அவரது எழுத்துக்கள், கவிதைத் துறை சார்ந்த எவருக்கும்


 

விருது பெறும் அசோகமித்ரன்

ஒரு நாடகக் கதாபாத்திரத்தின் பெயரையே தன் பெயராகக் கொண்ட அசோகமித்திரன் என்கிற தியாகராஜன் தமிழ் இலக்கிய உரைநடை வரலாற்றின் ஒரு காலகட்டம். சக ஜீவன்களின் மீது கரிசனம் ததும்பும்  இவரது படைப்புகள் எளிமையானவை. எளிய மனிதர்களின் வாழ்வில் நாம் கண்ட அல்லது காணத்தவறிய


 
வித்யாசங்கர் ஸ்தபதி
வித்யாசங்கர் ஸ்தபதி
இலக்கியத்தின் வகைகளான கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை போன்ற பத்தொன்பது வகைகளை ஒரு மரத்தின் இலைகளாக இந்த சாரல் நினைவுச் சிற்பத்தில் காட்சிப் படுத்தியிருக்கிறார் வித்யாசங்கர் மேலும்

சாரல் இலக்கிய விருது 2012

யானை – வண்ணநிலவன் – தேர் – வண்ணதாசன் / எஸ். ராமகிருஷ்ணன் பேச்சு


ஜனவரி – 7,    சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவ நேயப்பாவணர் அரங்கத்தில் விளம்பரப்பட உலகின் முன்னனி இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரியின் தந்தையரின் நினைவாக ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் சாரல் விருது இவ்வருடம் எழுத்துலகின் முன்னனி எழுத்தாளர்களான திரு. வண்ணநிலவன் மற்றும் திரு. வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது.

இவ்விருது சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி  அவர்களால் உருவாக்கப்பட்ட கலைநயமிக்க விருது சிற்பமும் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் அடங்கியது.

எழுத்தாளர் திரு. வண்ணநிலவனின் “எதையேனும் சார்ந்திரு” பாடலோடு விழாவை திரு. ரவிசுப்ரமணியன் அவர்கள் தொடங்கினார்.

மேலும்...